பாதுகாப்பை வலுப்படுத்தும் இந்தியா : ரூ.3,000 கோடிக்கு INVAR ஏவுகணைகள் கொள்முதல்!
Jan 14, 2026, 10:44 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

பாதுகாப்பை வலுப்படுத்தும் இந்தியா : ரூ.3,000 கோடிக்கு INVAR ஏவுகணைகள் கொள்முதல்!

Murugesan M by Murugesan M
May 29, 2025, 07:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியாவின் பாதுகாப்பு மேம்பாடு நடவடிக்கையாக 3,000 கோடி ரூபாய் மதிப்புள்ள 500 (INVAR) இன்வார் ஏவுகணைகளை அரசு நிறுவனமான பாரத் டைனமிக்ஸ் நிறுவனத்திடமிருந்து வாங்குவதற்கான ஒப்பந்தத்தைப் பாதுகாப்புத் துறை  அமைச்சகம் இறுதி செய்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

இந்த மாத தொடக்கத்தில், இந்தியாவின் பாதுகாப்புத் தயார்நிலையை வலுப்படுத்த, சுமார்  40,000 கோடி ரூபாய்  மதிப்பிலான அவசரக்கால கொள்முதலுக்குப் பாதுகாப்பு தளவாட கொள்முதல் கவுன்சில்  ஒப்புதல் அளித்தது. முன்னதாக, உள்நாட்டு பாதுகாப்புத் திறன்களை மேம்படுத்தும் வகையில், இந்தியாவின் லட்சிய ஐந்தாவது தலைமுறை போர் ஜெட் திட்டமான மேம்பட்ட நடுத்தர போர் விமானம் (AMCA) திட்டத்துக்கான செயல்பாட்டு மாதிரியை மத்திய அரசு அங்கீகரித்தது. ஏற்கெனவே, இலகுரக போர் விமானம் (LCA) தேஜாஸின் வெற்றியைத் தொடர்ந்து, நடுத்தர போர் விமானம் திட்டம் உருவாக்கப் பட்டது.

இந்தச் சூழலில், பாரத் டைனமிக்ஸ் நிறுவனத்திடமிருந்து 500  INVAR- இன்வார்   பீரங்கி  எதிர்ப்பு  ஏவுகணைகளுக்கான 3,000 கோடி ரூபாய் மதிப்பிலான ஆர்டரை மத்திய பாதுகாப்புத் துறை  அமைச்சகம் இறுதி செய்துள்ளது.  இந்த கொள்முதல் நாட்டின் மேற்கு மற்றும் வடக்கு எல்லைகளில் ராணுவத்  தயார்நிலையை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.

3,000 கோடி ரூபாய்க்கு மேல் உள்ள எந்தவொரு ஒப்பந்தத்துக்கும் பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழுவின்  ஒப்புதல் தேவை என்பதால் அதைப் பெறுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.  இது,T-90  பீரங்கிகளை மேம்பட்ட ஏவுகணை அமைப்புகளுடன் பொருத்துவதன் மூலம் இந்தியாவின் கவச போர்த் திறன்களை வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக நவீன போர்க்களத் தேவைகளின் பின்னணியில், இந்திய இராணுவத்தின் துப்பாக்கிச் சூடு சக்தியை இந்த  INVAR- ஏவுகணைகள் மேம்படுத்தும் என்று கூறப் படுகிறது.

தரைவழியாக  முன்னேறும் எதிரி  பீரங்கிகளைத் தாக்கி அழிப்பதற்கு முக்கிய ஆயுதமாக இந்த  INVAR- ஏவுகணைகள் பயன்படுத்தப்படுகின்றன. அனைத்து வானிலையிலும் பகல் மற்றும் இரவு என எல்லா நேரங்களிலும் செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ஏவுகணைகள் கவச வாகனங்களை அழிக்கும்  திறன் கொண்டவை ஆகும்.

சிறப்பு விரைவு எதிர்வினைப் படைகள், தரைப்படைகள் மற்றும் விமானப் படைகளுக்கு இந்த ஏவுகணைகள் பயனுள்ளதாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. ஏற்கெனவே “ஹெலினா” மற்றும் “துருவாஸ்த்ரா” போன்ற உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட ATGM அமைப்புகளை இந்தியா உருவாக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: 000 crore!India strengthens security: Purchase of INVAR missiles for Rs. 3
ShareTweetSendShare
Previous Post

மனதின் குரல் நிகழ்ச்சியை மக்களிடம் கொண்டு சேர்த்த தமிழக பாஜக நிர்வாகிகளுக்கு நயினார் நாகேந்திரன் நன்றி!

Next Post

சேலம் மாநகராட்சி கூட்டத்தில் மோதல் – அதிமுக கவுன்சிலரை தாக்கிய திமுக கவுன்சிலர்கள்!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies