பாதுகாப்பை வலுப்படுத்தும் இந்தியா : ரூ.3,000 கோடிக்கு INVAR ஏவுகணைகள் கொள்முதல்!
Sep 9, 2025, 01:34 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

பாதுகாப்பை வலுப்படுத்தும் இந்தியா : ரூ.3,000 கோடிக்கு INVAR ஏவுகணைகள் கொள்முதல்!

Web Desk by Web Desk
May 29, 2025, 07:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியாவின் பாதுகாப்பு மேம்பாடு நடவடிக்கையாக 3,000 கோடி ரூபாய் மதிப்புள்ள 500 (INVAR) இன்வார் ஏவுகணைகளை அரசு நிறுவனமான பாரத் டைனமிக்ஸ் நிறுவனத்திடமிருந்து வாங்குவதற்கான ஒப்பந்தத்தைப் பாதுகாப்புத் துறை  அமைச்சகம் இறுதி செய்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

இந்த மாத தொடக்கத்தில், இந்தியாவின் பாதுகாப்புத் தயார்நிலையை வலுப்படுத்த, சுமார்  40,000 கோடி ரூபாய்  மதிப்பிலான அவசரக்கால கொள்முதலுக்குப் பாதுகாப்பு தளவாட கொள்முதல் கவுன்சில்  ஒப்புதல் அளித்தது. முன்னதாக, உள்நாட்டு பாதுகாப்புத் திறன்களை மேம்படுத்தும் வகையில், இந்தியாவின் லட்சிய ஐந்தாவது தலைமுறை போர் ஜெட் திட்டமான மேம்பட்ட நடுத்தர போர் விமானம் (AMCA) திட்டத்துக்கான செயல்பாட்டு மாதிரியை மத்திய அரசு அங்கீகரித்தது. ஏற்கெனவே, இலகுரக போர் விமானம் (LCA) தேஜாஸின் வெற்றியைத் தொடர்ந்து, நடுத்தர போர் விமானம் திட்டம் உருவாக்கப் பட்டது.

இந்தச் சூழலில், பாரத் டைனமிக்ஸ் நிறுவனத்திடமிருந்து 500  INVAR- இன்வார்   பீரங்கி  எதிர்ப்பு  ஏவுகணைகளுக்கான 3,000 கோடி ரூபாய் மதிப்பிலான ஆர்டரை மத்திய பாதுகாப்புத் துறை  அமைச்சகம் இறுதி செய்துள்ளது.  இந்த கொள்முதல் நாட்டின் மேற்கு மற்றும் வடக்கு எல்லைகளில் ராணுவத்  தயார்நிலையை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.

3,000 கோடி ரூபாய்க்கு மேல் உள்ள எந்தவொரு ஒப்பந்தத்துக்கும் பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழுவின்  ஒப்புதல் தேவை என்பதால் அதைப் பெறுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.  இது,T-90  பீரங்கிகளை மேம்பட்ட ஏவுகணை அமைப்புகளுடன் பொருத்துவதன் மூலம் இந்தியாவின் கவச போர்த் திறன்களை வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக நவீன போர்க்களத் தேவைகளின் பின்னணியில், இந்திய இராணுவத்தின் துப்பாக்கிச் சூடு சக்தியை இந்த  INVAR- ஏவுகணைகள் மேம்படுத்தும் என்று கூறப் படுகிறது.

தரைவழியாக  முன்னேறும் எதிரி  பீரங்கிகளைத் தாக்கி அழிப்பதற்கு முக்கிய ஆயுதமாக இந்த  INVAR- ஏவுகணைகள் பயன்படுத்தப்படுகின்றன. அனைத்து வானிலையிலும் பகல் மற்றும் இரவு என எல்லா நேரங்களிலும் செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ஏவுகணைகள் கவச வாகனங்களை அழிக்கும்  திறன் கொண்டவை ஆகும்.

சிறப்பு விரைவு எதிர்வினைப் படைகள், தரைப்படைகள் மற்றும் விமானப் படைகளுக்கு இந்த ஏவுகணைகள் பயனுள்ளதாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. ஏற்கெனவே “ஹெலினா” மற்றும் “துருவாஸ்த்ரா” போன்ற உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட ATGM அமைப்புகளை இந்தியா உருவாக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: 000 crore!India strengthens security: Purchase of INVAR missiles for Rs. 3
ShareTweetSendShare
Previous Post

மனதின் குரல் நிகழ்ச்சியை மக்களிடம் கொண்டு சேர்த்த தமிழக பாஜக நிர்வாகிகளுக்கு நயினார் நாகேந்திரன் நன்றி!

Next Post

சேலம் மாநகராட்சி கூட்டத்தில் மோதல் – அதிமுக கவுன்சிலரை தாக்கிய திமுக கவுன்சிலர்கள்!

Related News

உதவிக்கரம் நீட்டிய இந்திய ராணுவம்

உலகத் தலைவர்களுக்கு ஹெட்மாஸ்டர் பிரதமர் மோடி : புகழ்ந்து தள்ளிய இஸ்ரேல் பாதுகாப்பு நிபுணர்!

இமயமலையை குடைந்து ரயில்வே சுரங்க பாதை : மலைக்க வைக்கும் ரயில்வேதுறையின் மகத்தான சாதனை!

பேஸ்புக், யூடியூப்பிற்கு தடை : போர்க்கோலம் பூண்ட GEN-Z இளைஞர்கள் – கலவர பூமியான நேபாளம் பற்றி எரியும் காத்மாண்டு!

அவமானப்படுத்திய FORD அலறவிட்ட ரத்தன் டாடா : உதாசீனங்களை உரமாக்கி சாதனை!

யாரும் நெருங்க முடியாதாம் : அமெரிக்காவின் 6-ம் தலைமுறை போர் விமானம்!

Load More

அண்மைச் செய்திகள்

ட்ரம்பிற்கு எதிராக முழக்கம் : அமெரிக்க ஒபன் டென்னிஸ் போட்டியில் அவமானம்!

பலவீனமாகும் பூமியின் காந்தபுலம் : விஞ்ஞானிகள் எச்சரிக்கை!

15 ஆண்டுகளாக செயின் திருடி வணிக வளாகம் கட்டிய திமுக பஞ். தலைவி : போலீசாரிடம் வாக்குமூலம்!

நீருக்கடியில் நகரம் கண்டுபிடிப்பு : 8500 ஆண்டுகள் பழமையானதா!

ரிதன்யா தற்கொலை வழக்கின் விசாரணை – சிபிஐக்கு மாற்ற சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு!

கேடுகெட்ட ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின் : அண்ணாமலை

அதிமுக MLA-க்கள் நிதியில் கட்டிய ரேஷன் கடைகள் மூடல் – திமுகவினரின் கார் பார்க்கிங் ஆக மாறியதால் அதிர்ச்சி!

முக்கியத்துவம் பெற்ற குடியரசு துணை தலைவர் தேர்தல்!

விரைவில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நிகழும் : நயினார் நாகேந்திரன்

பந்திப்பூர் வனப்பகுதியில் சுற்றுலாப் பயணியின் காரை விரட்டிய யானை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies