பாகிஸ்தானுக்கு 5வது தலைமுறை ஸ்டெல்த் போர் விமானங்களைச் சீனா வழங்க உள்ள நிலையில், இந்தியா ஸ்டெல்த் போர்விமான எதிர்ப்பு ரேடாரை உள்நாட்டிலேயே உருவாக்கி உள்ளது. உள்நாட்டு பாதுகாப்பு தொழில்நுட்பத்தின் வெற்றியாகக் கருதப்படும் Anti-stealth Surya VHF radar பற்றிய ஒரு செய்தி தொகுப்பைப் பார்க்கலாம்.
வான் பாதுகாப்பு திறன்களை நவீனமயமாக்கி வரும் இந்தியாவுக்கு, பழைய சோவியத் கால உபகரணங்களை மாற்ற வேண்டிய அவசர தேவை ஏற்பட்டுள்ளது. இந்திய விமானப்படை தற்போது Ural-4320 டிரக் சேஸில் பொருத்தப்பட்ட பழைய P-18 முன்னெச்சரிக்கை ரேடார்களுடன் செயல்படுகிறது. வளர்ந்து வரும் வான் வழி அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள அதிநவீன தொழில் ரேடார்கள் தேவைப்படுகின்றன.
சீனாவில் தயாரிக்கப்பட்ட J-35A ஸ்டெல்த் போர் விமானங்களைப் பாகிஸ்தான் வாங்கும் நிலையில் இந்தியாவின் பாரம்பரிய ரேடார் கண்டறிதல் முறைகளுக்குப் புதிய சவால்கள் ஏற்பட்டுள்ளன. இந்தச் சூழலில், பெங்களூரில் உள்ள பாதுகாப்பு தொழில்நுட்ப நிறுவனமான ஆல்பா டிசைன் டெக்னாலஜிஸ் இந்திய விமானப்படைக்காக புதிய ரேடார் அமைப்பை உருவாக்கியுள்ளது.
200 கோடி ரூபாய் மதிப்பில் ஸ்டெல்த்-போர் விமானங்களைக் கண்டறியும் ஆறு சூர்யா VHF ரேடார் அமைப்பை இந்நிறுவனம் தயாரித்துள்ளது. கடந்த மார்ச் மாதம் முதல் ரேடார் அமைப்பை இந்தியா விமானப்படைக்கு வழங்கியது.
ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது, S-400, ஆகாஷ் மற்றும் ஆகாஷ்தீர் உள்ளிட்ட இந்தியாவின் வான் பாதுகாப்பு அமைப்புகள், பாகிஸ்தான் ஏவிய நூற்றுக்கணக்கான ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை நடுவானில் இடைமறித்துத் தாக்கி அழித்தன.
மேலும், அருண்தர், அஷ்வினி மற்றும் ரோகிணி 3D ரேடார் அமைப்புகள் உள்ளிட்ட தற்போதைய நடுத்தர AESA ஆற்றல்மிக்க பல்வேறு ரேடார் தொழில்நுட்பங்களின் பலங்களை ஒருங்கிணைக்கும் MULTI LAYERED பாதுகாப்பு அமைப்பாக சூர்யா VHF ரேடார் அமைந்துள்ளது.
சூர்யா ரேடார் என்பது ஸ்டெல்த் போர் விமானங்கள் மற்றும் குறைந்த-கண்காணிக்க உருவாக்கப்பட்ட ஒரு மொபைல், 3D ரேடார் அமைப்பாகும். மேம்பட்ட 3D கண்காணிப்பு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் இந்த ரேடார் VHF பேண்டில் செயல்படுகிறது.
இது 15 கிலோமீட்டர் வரை கண்டறிதல் உயரத்துடன் முழுமையான 360-டிகிரி கவரேஜை வழங்குகிறது. இது 30 முதல் 300 MHz வரையிலான உயர்-அதிர்வெண் ரேடார் அமைப்புகளைத் தவிர்க்கும் இலக்குகளைக் கண்டறிய அனுமதிக்கிறது. இது சீனாவின் J-20 மற்றும் J-35A போர் விமானங்கள் போன்ற stealth போர் விமானங்களைக் எளிதில் கண்டறிந்து இடைமறிப்பதற்கு உதவுகிறது.
இத்தகைய மேம்பட்ட விமானங்களைக் கண்டறிந்து கண்காணிக்கும் சூர்யா ரேடாரின் திறன், பயனுள்ள வான் பாதுகாப்பு ஒருங்கிணைப்புக்கு அவசியமான ஆரம்ப எச்சரிக்கை திறன்களை இந்திய விமானப்படைக்கு வழங்குகிறது.
Anti-stealth Surya VHF ரேடார், 2 சதுர மீட்டர் ரேடார் குறுக்குவெட்டு கொண்ட ஒரு இலக்குக்கு 400 கிலோமீட்டர் வரை உறுதிப்படுத்தப்பட்ட கண்டறிதல் வரம்பை வழங்குகிறது. மேம்பட்ட கண்காணிப்புக்கான ஒரு பார்வை பயன்முறையைக் கொண்டுள்ளது. ரேடார் ஆண்டெனாவை வைப்பதற்கும், ஆபரேட்டர் நிலையத்தை வைப்பதற்கும் என இரண்டு சிறப்பு 6×6 TRUCK களில் சூர்யா ரேடார் செயல்படுகிறது.
இத்தகைய மேம்பட்ட விமானங்களைக் கண்டறிந்து கண்காணிக்கும் சூர்யா ரேடாரின் திறன், பயனுள்ள வான் பாதுகாப்பு ஒருங்கிணைப்புக்கு அவசியமான ஆரம்ப எச்சரிக்கை திறன்களை இந்திய விமானப்படைக்கு வழங்குகிறது.
(stealth) ஸ்டெல்த் போர் விமானங்களுக்கு எதிராக முன்கூட்டியே எச்சரிக்கை வழங்கும் ரேடாரின் திறன், இந்தியா பயனுள்ள தடுப்பு திறன்களைப் பேணுவதையும், சாத்தியமான அச்சுறுத்தல்களுக்கு ஏற்றவாறு பதிலளிக்க முடியும் என்பதையும் உறுதி செய்கிறது.
பாதுகாப்பு தொழில்நுட்பத்துக்கு இறக்குமதியை நம்பி இருப்பதைக் குறைப்பதற்காகச் செயல்படுத்தப் பட்ட ஆத்மநிர்பர் பாரத் திட்டத்தின் இன்னொரு வெற்றி தான் Anti-stealth Surya VHF radar. இது இந்தியாவின் தேசியப் பாதுகாப்புக்கான தொழில் நுட்ப வளர்ச்சியில், ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல் ஆகும்.