மணிப்பூரில் ஆட்சி அமைக்க பாஜகவின் 44 சட்டமன்ற உறுப்பினர்கள் தயாராக உள்ளதாக ஆளுநரை சந்தித்த பின் பாஜக எம்எல்ஏ தொக்கோம் ராதேஷியாம் தெரிவித்துள்ளார்.
மணிப்பூர் மாநிலத்தில் 2023-ம் ஆண்டு மே மாதம் மெய்தி மற்றும் குகி ஆகிய இரண்டு சமூகத்தினருக்கு இடையில் ஏற்பட்ட மோதல் வன்முறையாக மாறியது. இதனையடுத்து, முதலமைச்சர் பொறுப்பிலிருந்து பைரன் சிங் விலகியதால் மணிப்பூர் மாநிலத்தில் குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.
இந்நிலையில், தொக்கோம் ராதேஷியாம் உட்பட 9 எம்எல்ஏக்கள் மணிப்பூர் ஆளுநர் அஜய் குமார் பல்லாவை சந்தித்தனர். அதன்பின் பேட்டியளித்த அவர், மக்கள் விருப்பப்படி புதிய ஆட்சியமைக்க 44 எம்.எல்.ஏ.-க்கள் தயாராக இருப்பதாகவும், இதை ஆளுநரிடம் எடுத்துரைத்ததாகவும் தெரிவித்தார்.
மேலும், மணிப்பூரில் நிலவும் பிரச்னைகளுக்கான தீர்வு குறித்து ஆலோசனை நடத்தியதாகவும் கூறினார்.