ஜம்மு-காஷ்மீர் முதலமைச்சர் ஓமர் அப்துல்லா குல்மார்க்கில் சுற்றுலா பயணிகளை சந்தித்து பேசினார்.
பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ம் தேதி நடந்த பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து, இந்தியா ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையை மேற்கொண்டது.
இந்த நிலையில், குல்மார்க் வருகை தந்துள்ள சுற்றுலா பயணிகளை முதலமைச்சர் ஓமர் அப்துல்லா சந்தித்தார். அப்போது சுற்றுலா பயணிகளுடன் அவர் உரையாடினார்.