ஹிண்டன்பர்க் விவகாரத்தில் செபி முன்னாள் தலைவர் மாதபி புச் மீதான புகார்களை முடித்து வைத்து லோக்பால் அமைப்பு உத்தரவிட்டது.
சட்டவிரோத பணப் பரிவர்த்தனை, பங்கு விலை மோசடி உள்ளிட்ட முறைகேடுகளில் ஈடுபட்டதாக அதானி குழும நிறுவனங்கள் மீது அமெரிக்க நிறுவனமான ஹிண்டன்பர்க் குற்றஞ்சாட்டியது.
அதானி குழும நிறுவனங்களின் முறைகேடுக்குப் பயன்படுத்தப்பட்ட வெளிநாட்டு நிதியில் செபி முன்னாள் தலைவர் மாதபி புச் மற்றும் அவரின் கணவருக்கு பங்குகள் இருந்ததாக ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டை முன்வைத்தது.
இதைத் தொடர்ந்து மாதபி புச் மீது லோக்பால் அமைப்பிடம் புகார் அளிக்கப்பட்டது. இந்நிலையில், மாதபி பூச் மீதான குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என லோக்பால் அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும் அவர் மீதான புகார்களை முடித்து வைத்தும் லோக்பால் அமைப்பு உத்தரவிட்டது.