ராமதாஸ், அன்புமணி இடையே விரிசல் அதிகரித்துள்ள நிலையில், பாமக இளைஞர் சங்கத் தலைவர் பொறுப்பில் இருந்து விலகுவதாக முகுந்தன் அறிவித்துள்ளார்.
பாமக பொறுப்பில் இருந்து விலகுவதாக அன்புமணிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், பாமக இளைஞர் சங்கத் தலைவராக 2024ஆம் ஆண்டு டிசம்பர் 28ஆம் தேதி நியமிக்கப்பட்டதை நினைவு கூர்ந்துள்ளார்.
சொந்த காரணங்களுக்காக தற்போது பாமக இளைஞர் சங்கத் தலைவர் பொறுப்பிலிருந்து விலகிக் கொள்கிறேன் எனவும் கூறியுள்ளார். ராமதாஸ் தான் என்றென்றும் தனது குலதெய்வம் என்றும், அன்புமணிதான் எங்களின் எதிர்காலம் என்றும் அவர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், உணர்வுடன் தொடர்ந்து கட்சிப் பணியாற்றுவேன் எனவும் முகுந்தன் உறுதியளித்துள்ளார்.