குடியாத்தம் அருகே உள்ள கெங்கையம்மன் கோயில் சிரசு திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த தட்டப்பாறை பகுதியில் உள்ள கெங்கையம்மன் கோயிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் 15ஆம் தேதி சிரசு திருவிழா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், நடப்பாண்டுக்கான சிரசு திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
கெங்கையம்மன் கோயில் இருந்து அம்மன் சிரசு மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக புறப்பட்டது. அப்போது, பக்தர்கள் ஆடு, கோழிகளை பலியிட்டு நேர்த்திக்கடனை செலுத்தினர்.
மேலும், நாட்டுப்புற கலைநிகழ்ச்சிகளுடன் அம்மன் சிரசு கோயிலுக்கு கொண்டுவரப்பட்டது. கெங்கையம்மன் கோயில் சிரசு திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.