கர்நாடகாவில் நடிகர் கமல்ஹாசன் உருவ படத்தின் மீது தக்காளிகளை வீசி கன்னட அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
சாம்ராஜ் நகர் மாவட்டத்தில் கன்னட ஆதரவு ஆர்வலர்கள் தேசிய நெடுஞ்சாலையை மறித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். கமல்ஹாசன் கன்னடத்திற்கு எதிரானவர் என கோஷங்களை எழுப்பிய போராட்டக்காரர்கள், கமல்ஹாசனின் திரைப்படம் கர்நாடகாவில் வெளியிடப்பட்டால் திரையரங்கை முற்றுகையிடுவோம் என்று எச்சரிக்கை விடுத்தனர்.