திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே உள்ள ஸ்ரீமத் நாராயண பிருந்தாவன ஆசிரமத்தில் வைரமுடி மகா உற்சவம் சிறப்பாக நடைபெற்றது.
ஸ்ரீ பகவத் ராமானுஜரின் 1008 வது திரு அவதார தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட இந்த உற்சவத்தில் மேள தாளங்கள் முழங்க 108 திவ்ய தேசங்களில் இருந்து ஊர்வலமாகச் சீர் கொண்டுவரப்பட்டது.
பின்னர் ஸ்ரீ பகவத் ராமானுஜருக்கு வைர கிரீடம் அணிவிக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டது.