உலக நாடுகளில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் வெப்பநிலை புதிய உச்சம் தொடப்போவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதுதொடர்பாக உலக வானிலை ஆராய்ச்சி அமைப்பு, இங்கிலாந்து வானிலை ஆராய்ச்சி நிலையம் ஆகியவை அடுத்த 5 ஆண்டுகளுக்கான வானிலை கணிப்பை வெளியிட்டுள்ளன.
அதன்படி, அடுத்த 5 ஆண்டுகளில், வருடாந்திர வெப்பநிலை புதிய உச்சம் தொடுவதற்கு 80 சதவீத வாய்ப்பு இருக்கிறது என்றும், மேலும், 10 ஆண்டுகளுக்கு முன்பு நிர்ணயிக்கப்பட்ட சர்வதேச வெப்பநிலை வரம்பை மீண்டும் மீறும் வாய்ப்பும் அதிகமாக இருக்கிறது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.