தேவிப்பட்டினம் பகுதியில் 100 மீட்டர் தூரத்திற்குக் கடல் உள்வாங்கியதால் நாட்டுப்படகுகள் தரைதட்டி நின்றன.
தென் தமிழக கடலோர பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்படும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி, அரிச்சல்முனை, வாலிநோக்கம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது.
பாம்பன் துறைமுகத்தில் 6வது நாளாக 3ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ள நிலையில், தேவிப்பட்டினம் கடல் பகுதியில் வழக்கத்திற்கு மாறாக சுமார் 100 மீட்டர் தூரத்திற்குக் கடல் உள்வாங்கியுள்ளது. கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகள் தரை தட்டி நிற்கின்றன.