சுவிட்சர்லாந்து நாட்டின் வாலேஸ் அருகே உள்ள பனிமலை சிகரத்தின் உச்சியிலிருந்து ராட்சத பாறை சரிந்து விழுந்தது.
முன்னதாக அந்த கிராமத்திலிருந்த சுமார் 300-க்கும் மேற்பட்ட மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
இருப்பினும் பனிச்சரிவு காரணமாக அந்த கிராமம் முழுவதும் பனியால் மூடியது. இந்த நிலையில், அப்பகுதியில் மீட்புப்பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ வீரர்கள் உட்பட 5-க்கும் மேற்பட்டவர்கள் மாயமாகி உள்ளனர்.
பனிச்சரிவில் சிக்கி மாயமானவர்களைத் தீவிரமாகத் தேடும் பணி நடைபெற்று வருகிறது.