பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் குறித்து, இந்தியாவின் நிலைப்பாட்டை விளக்குவதற்காக, கொலம்பியா சென்ற சசி தரூர் தலைமையான குழுவிற்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர் கொலம்பியா நாடாளுமன்ற உறுப்பினர்களை, சந்தித்து பாகிஸ்தானின் பயங்கரவாத ஆதரவு நிலைப்பாட்டை விளக்கினர். இதன் பின் பேசிய சசி தரூர், பயங்கரவாதிகள் பயிற்சியைத் தொடர பாகிஸ்தான் பாதுகாப்பான புகலிடத்தைத் தருவதாகவும், இது மோசமான செயல் என்றும் தெரிவித்தார்.
மேலும், பாகிஸ்தான் ராணுவ உபகரணங்களில் பெரும்பாலானவை பாதுகாப்பிற்காக உபயோகப்படுத்தவில்லை என்றும், பயங்கரவாத தாக்குதல் நடத்தப் பயன்படுத்தப் படுத்தப்படுவதாகவும் சசிதரூர் குற்றம் சாட்டினார்.