பெங்களூரு அருகே அழகு நிலையத்தில் புகுந்து உரிமையாளரைச் சரமாரியாகத் தாக்கிய பெண் மீது வழக்குப்பதிவு செய்து காவல்துறை தேடி வருகின்றனர்.
கர்நாடக மாநிலம், பெங்களூரு அருகே அம்ருத்ஹள்ளி பகுதியில் காவ்யா என்பவர் சொந்தமாக அழகு நிலையம் நடந்தி வருகிறார். இவரது அழகு நிலையத்தில் பணிபுரிந்து வந்த சஞ்சு என்பவர், காவ்யாவிடம் வேலை பார்ப்பதை விட்டுவிட்டு சொந்தமாக அழகு நிலையம் திறந்துள்ளார்.
இதனால், ஆத்திரமடைந்த காவ்யா, சஞ்சுவின் அழகு நிலையத்திற்கு அடியாட்களுடன் வந்து மிரட்டியுள்ளார். மேலும், அவரை சரமாரியாக தாக்கி, தனது காரில் அழைத்துச் சென்று மிரட்டியுள்ளார். இந்த சம்பவம் அழகு நிலையத்தில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
இது குறித்து சஞ்சுவின் மனைவி காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், சஞ்சுவை காவல் நிலையம் அருகே விட்டுச் சென்று காவ்யா தலைமறைவானார். எனினும், தப்பியோடிய காவ்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.