30 நாள் போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்ளுமாறு, ரஷ்யாவை ஐக்கிய நாடுகள் சபையில் அமெரிக்கா வலியுறுத்தி உள்ளது.
இதுதொடர்பாக ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் பேசிய அமெரிக்கத் துணைத் தூதர் ஜான் கெல்லி, உக்ரைனில் அமைதியை உருவாக்க ரஷ்யாவுடன் இணைந்து பணியாற்ற விரும்புவதாகத் தெரிவித்தார்.
அதே நேரத்தில் ரஷ்யா ஆக்கிரமிப்பைத் தொடர்ந்தால், அமெரிக்கா அமைதி பேச்சுவார்த்தையில் இருந்து விலகி, பொருளாதாரத் தடைகளை விதிக்கும் எனவும் எச்சரித்தார்.