பிரான்ஸ் நாட்டில் பொது இடங்களில் புகைபிடிக்கத் தடை விதிக்கப்படுவதாக அந்நாட்டுச் சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சர் கேத்தரின் வௌட்ரின் தெரிவித்துள்ளார்.
இந்தத் தடை ஜூலை 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று அவர் கூறினார். குழந்தைகள் இருக்கும் இடத்தில் புகையிலை மறைந்து போக வேண்டும் என்று வலியுறுத்திய அவர், தடையை மீறி பொது இடத்தில் புகை பிடித்தால் 13 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என எச்சரித்தார்.