கேரள மாநிலம் கண்ணூரில் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் 50க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளம் சூழ்ந்தது.
கேரளாவில் தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கிய நிலையில், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வருகிறது.
கண்ணூர் தாவகரை பகுதியில் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் 50க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. இதனால் வீடுகளிலிருந்து வெளியேற முடியாமல் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாயினர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற தீயணைப்புத் துறையினர், வீடுகளில் சிக்கியவர்களை ரப்பர் படகுகள் மூலமாக மீட்டு, அரசுப் பள்ளியில் தங்க வைத்தனர்.