பல மதங்கள் இருந்தாலும், தர்மம் என்றால் அது சனாதன தர்மம் மட்டும்தான் என ஆளுநர் ஆர்.என். ரவி தெரிவித்துள்ளார்.
திருச்சி மாவட்டம் முசிறியில் அமைந்துள்ள பிரசன்ன வேங்கடாசலபதி பெருமாள் கோயிலில், 22 கோடி ரூபாய் மதிப்பிலான கட்டுமான பணிகளுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அடிக்கல் நாட்டினார்.
பின்னர் கோயில் வளாகத்தில் நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற அவர், ‘குணசீல மஹாத்மியம்’, ‘வள்ளுவத்தில் மெய்ஞானம்’ ஆகிய நூல்களை வெளியிட்டார்.
இதைத்தொடர்ந்து விழாவில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, நம்முடைய பாரத நாடானது ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாகத் தர்மத்தைப் பின்பற்றும் நாடாகத் திகழ்ந்து வருவதாகத் தெரிவித்தார்.
சனாதன தர்மத்தை அடிப்படையாகக் கொண்டே பாரதம் இயங்குவதாகக் கூறிய அவர், பல மதங்கள் இருந்தாலும், தர்மம் என்றால் அது சனாதன தர்மம் மட்டும்தான் எனக் கூறினார்.
தொடர்ந்து பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, சமூகமும், தர்மமும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை எனவும் தெரிவித்தார்.