திண்டுக்கல் மாவட்டம், பழனியில் அரசு சார்பில் வழங்கப்பட்ட இடத்தை காட்ட அதிகாரிகள் அலட்சியத்துடன் செயல்படுவதாக மாற்றுத்திறனாளிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
வருவாய்த்துறை சார்பில் வருவாய் தீர்வாய கூட்டத்தில் பங்கேற்ற மாற்றுத்திறனாளிகள் தங்களுக்கு 4 ஆண்டுகளுக்கு முன் அரசு சார்பில் இடம் மற்றும் பட்டா வழங்கப்பட்டதாகவும், ஆனால் இதுவரை அந்த இடத்தை காட்ட அதிகாரிகள் மறுப்பதாகவும் புகாரளித்தனர்.