பழுதடைந்த சாட்லைட் தொலைத் தொடர்பு சாதனத்தைச் சரி செய்து தரவேண்டும் எனக் கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் அரசுக்குக் கோரிக்கை வைத்தனர்.
பழுதடைந்த சாட்லைட் சாதனத்துடன் குறைதீர் கூட்டத்தில் பங்கேற்ற மீனவர்கள் அதனை அதிகாரிகளிடம் காண்பித்தனர்.
அப்போது பேசிய மீனவர்கள் ஆழ்கடலுக்குச் சென்று மீன்பிடிக்கும் தங்களுக்கு சாட்டிலைட் தொலைத் தொடர்பு மிகுந்த பயனளித்ததாகத் தெரிவித்தனர்.
தற்போது பழுதடைந்து இருக்கும் இந்த சாதனத்தைச் சீரமைத்துத் தரவேண்டும் எனவும் அதற்காக ஒரு சேவை மையத்தை அரசு ஏற்படுத்தித் தரவேண்டும் எனவும் மீனவர்கள் கோரிக்கை வைத்தனர்.