திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியில் தவறான பல் சிகிச்சை காரணமாக 8 பேர் உயிரிழந்த விவகாரத்தில் காவல்நிலையத்தில் மீண்டும் புகாரளிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2023ம் ஆண்டு தனியார் மருத்துவமனையில் பல் சிகிச்சை பெற்றுக்கொண்ட இந்திராணி என்பவர் ஓரிரு நாட்களிலே உயிரிழந்தார். இதனால் ஆத்திரமடைந்த அவரின் மகன் ஸ்ரீராம் குமார் என்பவர் மருத்துவர் அறிவரசனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
பின்னர் சிறையிலிருந்து வெளிவந்த அவர், பல் மருத்துவர் அறிவரசன் மீது மாவட்ட மருத்துவர் அலுவலகத்தில் புகார் அளித்தார். இதனடிப்படையில், அங்குச் சென்ற ICMR மற்றும் CMC குழுவினர் இந்திராணி உட்பட 8 நபர்கள் தவறான சிகிச்சை மூலம் உயிரிழந்ததை உறுதி செய்தனர்.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாகக் காவல்நிலையத்தில் புகாரளித்த ஸ்ரீராம் குமார் தன் தாயின் இறப்புக்கு நீதி வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளார்.