திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே கிராம சபை கூட்டத்தின் போது அரசு அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பிய சமூக ஆர்வலர் மீது திமுக இளைஞரணி செயலாளர் தாக்குதல் நடத்திய சம்பவம் அரங்கேறியுள்ளது.
இறையூர் பகுதியில் ஊராட்சி நிர்வாகம் சார்பில் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. அப்போது பொதுமக்களுக்கு ஆதரவாக அரசு அதிகாரிகளிடம், சமூக ஆர்வலர் ரஞ்ஜித்குமார் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த திமுக இளைஞரணி செயலாளர் பகலநாதன், ரஞ்ஜித்குமாரை தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.