கூகுள், ஆப்பிள், மைக்ரோசாஃப்ட், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகியவற்றைப் பயன்படுத்தும் 18 கோடியே 40 லட்சம் பேரின் கடவுச்சொற்கள் கசிந்ததாகத் தொழில்நுட்ப ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், சமூக ஊடகங்களின் கடவுச்சொற்கள் முதல், வங்கிக் கணக்குகளின் கடவுச்சொற்கள் வரை கசிந்திருப்பதாகவும், மிகப்பெரிய சைபர் தாக்குதலிலிருந்து தப்பிக்க உடனடியாக அனைவரும் கடவுச்சொற்களை மாற்ற வேண்டும் என்றும் அவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.
இருப்பினும், இதுதொடர்பாக எந்த நிறுவனமும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை இதுவரை வெளியிடவில்லை.