நெல்லை மாவட்டம் மாஞ்சோலையில் கனமழை காரணமாக மின் கம்பங்கள் சேதமானதால் தொடர்ந்து 10 நாட்களுக்கும் மேலாக மின்சாரமின்றி மக்கள் தவித்து வருகின்றனர்.
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் நெல்லை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது. மாஞ்சோலை, காக்காச்சி, நாலுமுக்கு உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை பெய்தது.
இதனால் மலைச் சாலையின் இருபுறங்களிலும் மின் கம்பங்கள் சாய்ந்ததால் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டது.
தொடர்ந்து 10 நாட்களுக்கும் மேலாக மின்சாரம் விநியோகிக்கப்படாததால் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் தவித்து வருகின்றனர்.