செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அருகேயுள்ள அரசு நேரடி கொள்முதல் நிலையத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமாகின.
கோரப்பட்டு நெல் கொள்முதல் நிலையத்தில் மேற்பார்வையாளர் நியமிக்கப்பட்டு 35 நாட்களுக்கு மேலாகியும் கொள்முதல் நிலையம் செயல்படாமல் உள்ளது.
இந்த நிலையில், மாவட்டம் முழுவதும் பெய்த கனமழை காரணமாக, கொள்முதல் நிலையத்தில் சேமித்து வைக்கப்பட்டுள்ள 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்து முளைவிட்டன.
நெல் மூட்டைகளைக் கொள்முதல் செய்யாததால் அவை முற்றிலும் சேதமடைந்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.