ஐபிஎல் தொடரின் வெளியேற்றுதல் சுற்று ஆட்டத்தில் குஜராத்தை வீழ்த்தி மும்பை அணி வெற்றி பெற்றது.
ஐபிஎல் தொடரில் முல்லன்பூரில் நடைபெற்ற வெளியேற்றுதல் சுற்று ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் – குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஆடின. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்று முதலில் பேட்டி செய்த மும்பை அணி, 20 ஓவரில் 5 விக்கெட்டை மட்டும் இழந்து 228 ரன்கள் குவித்தது.
இதனை தொடர்ந்து 229 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இல்லகுடன் களமிறங்கிய குஜராத் அணி, 20 ஓவரில் 6 விக்கெட்டை இழந்து 208 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதன் மூலம் 20 ரன் வித்தியாசத்தில் மும்பை வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் மும்பை அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறுவதற்கான தகுதி சுற்று 2-க்கு முன்னேறியது. குஜராத் டைட்டன்ஸ் தரப்பில் அதிகபட்சமாகச் சாய் சுதர்சன் 80 ரன்கள் எடுத்தார்.