ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா 24 பதக்கங்களுடன் புள்ளிப் பட்டியலில் 2-ம் இடத்தைப் பிடித்து அசத்தியுள்ளது.
தென்கொரியாவின் குமியில் கடந்த 27ம் தேதி ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி தொடங்கியது. இதில், இந்தியாவைச் சேர்ந்த 60-க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டனர். 5 நாட்கள் நடைபெற்ற போட்டிகள் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில் இந்தியா 8 தங்கம், 10 வெள்ளி , 6 வெண்கலம் என 24 பதக்கங்களை கைப்பற்றி புள்ளிப் பட்டியலில் 2ம் இடத்தைப் பிடித்து அசத்தியுள்ளது.
சீனா 32 பதக்கங்களுடன் முதலிடத்தைக் கைப்பற்றியது. நேற்று நடைபெற்ற மகளிருக்கான 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் இந்திய அணி வெள்ளிப்பதக்கம் வென்று அசத்தியது. அந்த அணியில் தமிழக வீராங்கனை அபிநயா இடம்பெற்றிருந்தார்.
தொடர்ந்து பதக்கங்களை அள்ளிக் குவித்த இந்திய வீரர், வீராங்கனைகளுக்கு மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டேவியா வாழ்த்து தெரிவி்ததுள்ளார். எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், தங்களை நினைத்து ஒட்டுமொத்த தேசமும் பெருமை கொள்வதாக கூறியுள்ளார்.