சிவகங்கையில் தனியார் கல்குவாரியில் பாறை சரிந்து 6 பேர் உயிரிழந்த விவகாரத்தில் வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர பணியிடை நீக்கம் செய்து ஆட்சியர் ஆஷா அஜித் உத்தரவிட்டுள்ளார்.
சிங்கம்புணரி அடுத்த மல்லக்கோட்டை கிராமத்தில் கடந்த 20-ம் தேதி பாறை சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் 6 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் கல்குவாரி சட்டவிரோதமாக செயல்பட்டு வந்தது தெரியவந்தது.
இதையடுத்து கல் குவாரியின் உரிமத்தை ரத்து செய்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். இந்த நிலையில், கனிமவள பிரிவு வருவாய் ஆய்வாளர் வினோத்குமார், மல்லாகோட்டை கிராம நிர்வாக அலுவலர் பாலமுருகன் ஆகிய இருவரையும் பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் உத்தரவிட்டுள்ளார்.