கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் பகுதியில், இந்து மதத்தை சேர்ந்த குழந்தைகளுடன் விளையாடிய மகனை ஸ்கிப்பிங் கயிற்றால் சரமாரியாக தாக்கிய கிறிஸ்தவ மத போதகர் கைது செய்யப்பட்டார்.
கருங்கல் பகுதியை சேர்ந்த கிறிஸ்தவ மத போதகர் கிங்ஸ்லி. அவரது இரு மகன்கள், அண்டை வீடுகளைச் சேர்ந்த இந்து மதக் குழந்தைகளுடன் விளையாடி உள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த கிங்ஸ்லி, தனது இரு மகன்களையும் ஸ்கிப்பிங் கயிற்றால் கொடூரமாக தாக்கியுள்ளார்.
அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தின் கொடுத்த தகவலின்பேரில் குழந்தைகளை மீட்ட போலீசார், கிறிஸ்தவ மத போதகரான கிங்ஸ்லி மீது 4 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.