நாட்டின் மொத்த ஜிஎஸ்டி வசூல் இந்த ஆண்டுக அதிகரித்துள்ளதாக மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, மே மாதத்தில் மொத்த ஜிஎஸ்டி வசூல் 16.4 சதவீதம் அதிகரித்து 2 லட்சத்து ஆயிரத்து 50 கோடியாக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் இதுவரை இல்லாத அளவிற்கு 2.37 லட்சம் கோடியை எட்டி சாதனை படைத்தது.
இந்நிலையில் மே மாதத்தில், உள்நாட்டு பரிவர்த்தனைகளின் மொத்த வருவாய் 13.7 சதவீதம் அதிகரித்து 1.50 லட்சம் கோடியாக இருந்த நிலையில்,
இறக்குமதிகள் மூலம் பெறப்பட்ட ஜிஎஸ்டி வருவாய் 25.2 சதவீதம் அதிகரித்து 51 ஆயிரத்து 266 கோடியாக இருந்தது.
அதேபோல, மே மாதத்தில் மொத்த மத்திய ஜிஎஸ்டி வருவாய் 35 ஆயிரத்து 434 கோடியாகவும், மாநில ஜிஎஸ்டி வருவாய் 43 ஆயிரத்து 902 கோடியாகவும் இருந்தது.
ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி வருவாய் 1.09 லட்சம் கோடியாக இருந்த நிலையில், செஸ் மூலம் பெறப்பட்ட வருவாய் 12 ஆயிரத்து 879 கோடி ரூபாயாக இருந்தது.