தென்காசி கோவிந்தபேரி ஊராட்சியில் இரண்டு அடுக்கு சமுதாய நலக்கூடத்தை ஜோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு திறந்து வைத்தார்.
தென்காசி மாவட்டம், கோவிந்தபேரி ஊராட்சிக்குட்பட்ட ராஜங்கபுரத்தில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு சமுதாய நலக்கூடம் கட்டப்பட்டது. இந்த சமுதாய நலக்கூடத்தில் போதுமான வசதிகள் இல்லாததால், இரண்டடுக்கு சமுதாய நலக்கூடத்தை அமைத்து தரவேண்டும் என கிராம மக்கள் சார்பில் ஜோஹோ நிறுவனத்திடம் கோரிக்கை வைக்கப்பட்டது.
அதன்படி, 2 அடுக்கு சமுதாய நலக்கூடத்தை கட்டி தர ஜோஹோ நிறுவனம் சார்பில் நிதியுதவி வழங்கப்பட்டது. இந்நிலையில், கோவிந்தபேரி ஊராட்சி கிராமத்தில் கட்டப்பட்ட புதிய சமுதாய நலக்கூடத்தை ஸ்ரீதர் வேம்பு திறந்து வைத்தார்.
மேலும், பள்ளிக்கல்வியில் சிறந்து விளங்கும் மாணவ, மாணவிகளை கௌரவப்படுத்திய அவர், தூய்மைப் பணியாளர்களுக்கு பொன்னாடை போர்த்தி பாராட்டு தெரிவித்தார்.