அசாமில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக சமூக ஊடகங்களில் பதிவிட்ட 81 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர் என அம்மாநில முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
தங்களுடைய அமைப்புகள் தொடர்ச்சியாக, தேச விரோத பதிவுகளைக் கண்டறிந்து நடவடிக்கை எடுத்து வருகிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானுடன் தொடர்புடைய உளவு வழக்குகள் பற்றி தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள், அசாம் உள்பட 8 மாநிலங்களில் 15 இடங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.