அன்புமணியால் நியமிக்கப்பட்ட மாவட்டச் செயலாளர், ராமதாஸால் நியமிக்கப்பட்ட மாவட்டச் செயலாளர் நடத்திய கூட்டத்தில் பங்கேற்க முயன்றதால் அவரை போலீசார் கைது செய்தனர்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸால் நியமிக்கப்பட்ட மாவட்டச் செயலாளர் பொதுக்குழுக் கூட்டம் நடத்தினார். இந்த கூட்டத்திற்கு அன்புமணியால் நியமிக்கப்பட்ட மாவட்டச் செயலாளர் பங்கேற்க முயன்றார். அப்போது அவரை தடுத்து நிறுத்திய போலீசார் கைது செய்தனர்.