ஞானசேகரனுக்கு 30 வருடம் தண்டனை குறைப்பு இல்லாத ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது ஆறுதல் அளிப்பதாக என பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னை கோயம்பேட்டில் உள்ள நியூ காலனியில், தனது 64வது பிறந்த நாளை ஒட்டி மருத்துவ முகாம் நிகழ்ச்சியைத் தமிழிசை செளந்தரராஜன் தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ஞானசேகரனுக்கு உதவி செய்த யார் அந்த சார் என்றும், தனியாக இவர் மட்டும் குற்றம் செய்தாரா, பின்புலம் என்ன என கேள்விகள் எழுகிறது எனவும் கூறியுள்ளார்.
அரக்கோணத்தில் கூட பல சார்கள் இருக்கிறார்கள் எனவும் தெரிவித்துள்ளார். முதலமைச்சர் கோமாளிகள் என்று குறிப்பிட்டுள்ளார் என்றும், ஆனால் கோமாளிகள் என்று சொல்கிறார்வர்கள் ஏமாளிகளாகப் போவார்கள் எனவும் தமிழிசை கூறியுள்ளார்.