உலக பணக்காரரான எலான் மஸ்க் போதைப்பொருள் பயன்படுத்திய குற்றச்சாட்டை மறுத்துள்ளார்.
கடந்த ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்புக்கு ஆதரவாக பிரசாரம் செய்தபோது எலான் மஸ்க், கெட்டமைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதனை மறுத்துள்ள எலான்மஸ்க், தான் போதைப் பொருளை பயன்படுத்தியதாக வெளியான செய்தி முற்றிலும் பொய்யானது என கூறியுள்ளார்.
மன அழுத்தத்தில் இருந்து வெளியேறுவதற்காக, மருத்துவர் பரிந்துரையின் பேரிலேயே கெட்டமைனை சில ஆண்டுகளுக்கு முன் பயன்படுத்தியதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.