சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செயல்படும் அரசுப் பள்ளியின் கழிவறைகள் உரியப் பராமரிப்பின்றி புதர்மண்டி கிடப்பதாகப் பெற்றோர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
சிவகங்கை ஆட்சியர் அலுவலக வளாகத்திலேயே செயல்படும் மருது பாண்டியர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 248 மாணவ, மாணவியர்கள் பயின்று வரும் நிலையில், கோடை விடுமுறை முடிந்து பள்ளி திறக்கப்பட்ட முதல் நாளிலேயே 5க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பள்ளிக்குத் தாமதமாக வருகை தந்தனர்.
மேலும், பள்ளியின் கழிவறைகள் முறையான பராமரிப்பின்றி புதர்மண்டி கிடப்பதுடன், கதவுகள் கழண்டுவிழும் சூழலில் ஆபத்தான முறையில் காணப்படுகிறது.
இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், கழிவறைகளை முறையாகப் பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.