போர் நிறுத்தம் தொடர்பாக ஹமாஸ் படையினர் அளித்த பதிலை முற்றிலுமாக ஏற்றுக் கொள்ள முடியாததென அமெரிக்கா தெரிவித்துள்ளது.
ஹமாஸ் – இஸ்ரேல் இடையேயான போரை நிறுத்துவது தொடர்பாக, அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் மத்திய கிழக்கு நாடுகளுக்கான சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்காப், புதிய ஒப்பந்தம் ஒன்றை உருவாக்கி உள்ளார்.
இதற்கு இஸ்ரேல் ஒப்புக்கொண்டுள்ளது. இதுகுறித்து அறிக்கை வெளியிட்ட ஹமாஸ், நிரந்தர போர் நிறுத்தத்தை ஏற்றுக் கொண்டால் பிணைக் கைதிகள் 10 பேரை விடுதலை செய்வதாகத் தெரிவித்தது.
இந்நிலையில் இதற்குப் பதிலளித்துள்ள அமெரிக்கச் சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்காப், இது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது எனவும், பேச்சுவார்த்தை நடத்த உருவாக்கப்பட்டுள்ள ஒப்பந்தத்தை ஹமாஸ் படையினர் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.