கூகுள் தனது தயாரிப்புகளை நேரடியாக இந்தியாவில் விற்பனை செய்வதற்காக அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைத் தொடங்கியது.
கூகுள் இதுவரை பிளிப்கார்ட், டாடா குழுமத்தின் குரோமா மற்றும் ரிலையன்ஸ் டிஜிட்டல் மூலம் விற்பனை செய்து வந்தது. இந்நிலையில் சமீபத்தில் ஆன்லைன் ஸ்டோரை தொடங்கிய கூகுள், இனிமேல் தனது தயாரிப்புகளை இங்கிருந்து வாடிக்கையாளர்களுக்கு நேரடியாக வழங்கும்.
இதன் மூலம் பிக்சல் ஸ்மார்ட்போன்கள், வாட்ச்கள் மற்றும் பட்ஸ்களை கூகுளில் இருந்து நேரடியாக வாங்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.