கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாபசுவாமி கோயிலில் 270 ஆண்டுகளுக்குப் பின் மகா கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது.
மிகப் பிரசித்திபெற்ற பத்மநாபசுவாமி கோயிலில் கடந்த 2017-ம் ஆண்டு உச்சநீதிமன்றம் நியமித்த நிபுணர் குழு அறிவுறுத்தலின்படி, புனரமைப்பு பணிகள் தொடங்கி நடைபெற்று வந்தன.
பின் கொரோனா தொற்று பரவல் காரணமாக முடங்கிய புனரமைப்பு பணிகள், மீண்டும் கடந்த 2021-ம் ஆண்டு தொடங்கி நடைபெற்று அண்மையில் முடிவுற்றன.
இந்நிலையில், வரும் ஜூன் 8-ம் தேதி பத்மநாபசுவாமி கோயிலில் மகா கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளதாகவும், அதற்கான முன்னேற்பாட்டுப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.