வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் பெய்து வரும் கனமழை காரணமாக, பல்வேறு இடங்களில் மழைநீர் சூழ்ந்து மக்களின் இயல்பு வாழ்க்கையை முடக்கியுள்ளது.
குறிப்பாகக் கிழக்கு இம்பால் பகுதியில் மழை வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் மருத்துவ மாணவர்கள் மற்றும் ஊழியர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
அவர்களைப் படகுகள் மூலம் பத்திரமாக மீட்கும் நடவடிக்கையில் இந்திய ராணுவத்தினர், தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப்படையினர் ஈடுபட்டுள்ளனர்.