பொள்ளாச்சி அருகே வீட்டில் தனியாக இருந்த கல்லூரி மாணவியை இளைஞர் கத்தியால் குத்திக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கோவை மாவட்டம் வடுக பாளையத்தைச் சேர்ந்த கண்ணன் என்பவரது மகள் அஸ்விகா தனியார் கல்லூரியில் 2-ஆம் ஆண்டு படித்து வந்தார்.
மாணவியின் பெற்றோர் வேலைக்குச் சென்ற நிலையில், வீட்டில் தனியாக இருந்த அவரை இளைஞர் ஒருவர் கத்தியால் சரமாரியாகக் குத்தி விட்டுத் தப்பிச் சென்றார். ரத்த வெள்ளத்தில் கிடந்த அஸ்விகாவை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அவர் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்த நிலையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இந்த நிலையில், மாணவியைக் கொன்றதாக பிரவின் குமார் என்பவர் காவல்நிலையத்தில் சரண் அடைந்தார். கல்லூரி மாணவி அஸ்விகாவை பிரவின் குமார் காதலித்து வந்ததாகவும், திருமணத்திற்கு மறுத்ததால் கொலை செய்ததாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.