ஸ்பெயின் சென்றுள்ள கனிமொழி தலைமையிலான அனைத்து கட்சி எம்.பி-க்கள் குழு, அங்குள்ள செனட் சபை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களைச் சந்தித்துப் பேசினர்.
பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாடு மற்றும் ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து எடுத்துரைக்கும் விதமாக, இந்தியாவின் அனைத்து கட்சி எம்.பி-க்கள் குழு உலக நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.
அந்த வகையில் ஸ்பெயின் சென்றுள்ள எம்.பி-க்கள் குழுவை மேட்ரிட்டில் பயங்கரவாத நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டோர் சங்கத்தினர் நேரில் சந்தித்துப் பேசினர்.