பாரத நாட்டை போன்ற பன்முகத்தன்மை கொண்ட நாடு உலகில் இல்லை என ஆளுநர் ஆர்.என்.ரவி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தெலங்கானா மாநிலம் உருவான தின விழா நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட ஆளுநர் ஆர்.என்.ரவி நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், பாரத நாடானது ஒரே குடும்பமாக உள்ளதெனத் தெரிவித்தார். பாரத நாட்டை போன்ற பன்முகத்தன்மை கொண்ட நாடு உலகெங்கிலும் இல்லை எனக் கூறிய அவர் பாரத மக்கள் ஒருவருக்கொருவர் இணக்கமாக இருப்பதாகத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், மொழியை வைத்து மக்கள் மத்தியில் பாகுபாட்டை ஏற்படுத்துவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என உறுதிப்படத் தெரிவித்தார்.