சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாகத் தென் ஆப்ரிக்க வீரர் ஹென்ரி கிளாசன் அறிவித்துள்ளார்.
தென் ஆப்ரிக்க அணியின் அதிரடி பேட்ஸ்மேனாக விளங்கும் கிளாசன், ஐபிஎல் போட்டிகளில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடி வருகிறார்.
கிளாசன் தென் ஆப்ரிக்க அணிக்காக 60 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 2 ஆயிரத்து 141 ரன்களை எடுத்துள்ளார்.
அதேபோல, இவர் 58 டி-20 போட்டிகளில் விளையாடி ஆயிரம் ரன்களையும், 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 104 ரன்களையும் எடுத்துள்ளார்.
2024-ம் ஆண்டில் டெஸ்ட் போட்டிகளில் இருந்து மட்டும் ஓய்வு பெறுவதாக அறிவித்த கிளாசன், தற்போது சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாகத் தெரிவித்துள்ளார்.