மும்பை – பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தின்போது முன்னாள் பெங்களூரு அணி வீரர் ஏபி டெவிலியர்ஸின் 9 ஆண்டுகால சாதனையை மும்பை வீரர் சூர்யகுமார் யாதவ் முறியடித்தார்.
பரபரப்பாக நடந்த இந்த போட்டியில் மும்பை அணியை வீழ்த்தி பஞ்சாப் அணி வெற்றி பெற்றது.
இந்த ஆட்டத்தில் சூர்யகுமார் யாதவ் 15 ரன்கள் எடுத்திருந்தபோது, ஐபிஎல் வரலாற்றில் ஒரு தொடரில் அதிக ரன்களை குவித்த தொடக்க வீரர் ஆல்லாத வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார்.
கடந்த 2016-ம் ஆண்டு பெங்களூரு அணிக்காக விளையாடிய ஏபி டெவிலியர்ஸ், அந்த தொடரில் 687 ரன்கள் குவித்திருந்ததே இதுவரை சாதனையாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.