நெல்லை மாவட்டம் வண்ணாரப்பேட்டையில் உள்ள செல்போன் கடையில் இருந்து எட்டாயிரம் ரூபாயை மர்ம நபர் திருடும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
வண்ணாரப்பேட்டை பகுதியில் இருளப்பன் என்பவர் செல்போன் கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில், அங்கு வந்த இளைஞர் ஒருவர், விற்பனையாளரின் கவனத்தைத் திசை திருப்பி கல்லா பெட்டியில் வைக்கப்பட்டிருந்த எட்டாயிரம் ரூபாயைத் திருடிச் சென்றார்.
இதுகுறித்த சிசிடிவி காட்சியின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.