பிரம்மபுத்திரா நதியை நிறுத்துவதாகச் சீனா விடுத்த மிரட்டலுக்கு அசாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா பதிலடி கொடுத்துள்ளார்.
இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், பிரம்மபுத்திராவின் மொத்த ஓட்டத்தில் சீனா 30 முதல் 35 சதவீதம் மட்டுமே பங்களிக்கிறது எனவும், மீதமுள்ள 65 முதல் 70 சதவீதம் இந்தியாவிற்குள் உற்பத்தி செய்யப்படுகிறது எனவும் கூறியுள்ளார்.
ஒருவேளை நீர் ஓட்டத்தைச் சீனா குறைத்தாலும் உண்மையில் இந்தியாவுக்கு அசாமில் ஆண்டுதோறும் ஏற்படும் வெள்ளத்தைத் தணிக்க அது உதவக்கூடும் எனவும் தெரிவித்துள்ளார்.