செங்கத்தில் விவசாயிகள் குறைதீர்வு கூட்டத்தில் அதிகாரிகள் பங்கேற்கவில்லை எனக் கூறி விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியில் வாரந்தோறும் விவசாயிகள் குறை தீர்வு கூட்டம் நடத்தப்படுவது வழக்கம்.
இந்த கூட்டத்தில் அதிகாரிகள் முறையாகக் கலந்து கொள்வதில்லை எனவும் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் விவசாயிகள் குற்றம் சாட்டினர்.
மேலும், பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் அவர்கள் சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.