சென்னையில் மாடியில் இருந்து தவறி விழுந்த இளைஞர் உயிரிழந்த நிலையில், மகனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக உயிரிழந்தவரின் தாய் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
சென்னை புரசைவாக்கம் பகுதியைச் சேர்ந்த சாந்தி என்பவரது மகன் ராகுல், டிபி சத்திரம் பகுதியில் உள்ள மாவு அரைக்கும் கம்பெனியில் கணக்காளராக பணியாற்றி வந்தார். கடந்த மே 25-ம் தேதி மாடியில் இருந்து தவறி விழுந்ததாக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ராகுல், மே 27-ம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்நிலையில், தனது மகனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக, ராகுலின் தாய் சாந்தி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
மனுவில் பணத்திற்காக அவரை சக நண்பர்கள் குடிக்க வைத்து அடித்து கொன்றிருக்கலாம் என சந்தேகிப்பதாக தெரிவித்துள்ள அவர், உரிய விசாரணை நடத்தி தனது மகனை கொன்றவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.