ராமநாதபுரம், திருவாடானையில் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோரத்தில் இருந்த வேப்ப மரத்தில் மோதி விபத்திற்குள்ளானது.
கேரளாவில் மீன் இறக்கிவிட்டு நாகப்பட்டினம் நோக்கி சென்றுகொண்டிருந்த லாரி கொச்சி – தொண்டி தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தபோது விபத்தில் சிக்கியது.
இதில் லாரி ஓட்டுநர் சிவானந்தம் லாரிக்குள் சிக்கிய நிலையில், அப்பகுதி மக்கள் தீயணைப்புத் துறையினர் மற்றும் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
அதனடிப்படையில் அங்கு விரைந்த தீயணைப்புத் துறையினர் 2 மணி நேரத்திற்கும் மேல் போராடி ஓட்டுநரை உயிருடன் மீட்டனர்.
காலில் பலத்த காயமடைந்த அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.